விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு அடிக்கடி மும்பை தாதா குரூப்களிடமிருந்து கொலை மிரட்டல் வரும். அரசு அவருக்கு பாதுகாப்பு அளித்திருந்தாலும் அவரும் தனக்கென்று தனி பாதுகாப்பு படை வைத்திருக்கிறார். சமீபத்தில் 5 கோடி கேட்டு சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த ராஜஸ்தானை சேர்ந்தவரை போலீசார் கர்நாடகாவில் கைது செய்தனர்.
இந்த நிலையில் ஷாருக்கானுக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளது. மும்பை பாந்திரா போலீஸ் நிலையத்துக்கு சத்தீஷ்கார் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து பைசன் கான் என்பவர் போனில் பேசியுள்ளார். “50 லட்சம் தரவில்லை எனில் நடிகர் ஷாருக்கானை கொலை செய்துவிடுவேன். அவர் தொலைபேசி எண் என்னிடம் இல்லை. அதனால்தான் உங்களிடம் இதனை கூறுகிறேன். நீங்களே வாங்கி கொடுத்து விடுங்கள்” என்று கூறியுள்ளார்.
இந்த கொலை மிரட்டலை அடுத்து பாந்திரா பேண்டு ஸ்டாண்டு பகுதியில் உள்ள ஷாருக்கானின் வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை பிடிக்க ராய்ப்பூருக்கு விரைந்தனர். கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட போன் நம்பர் பைசன் கான் என்பவருக்கு சொந்தமானது என்று உறுதியானது. இதையடுத்து ராய்பூர் போலீசார் உதவியுடன் அவரை பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர் ஒரு வழக்கறிஞர் என்பது தெரியவந்தது. தனது போன் கடந்த வாரம் தொலைந்து விட்டதாகவும், அதன் மூலம் மர்ம ஆசாமி எனது பெயரை பயன்படுத்தி மிரட்டல் விடுத்து இருக்கலாம் என்றும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.