துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு அடிக்கடி மும்பை தாதா குரூப்களிடமிருந்து கொலை மிரட்டல் வரும். அரசு அவருக்கு பாதுகாப்பு அளித்திருந்தாலும் அவரும் தனக்கென்று தனி பாதுகாப்பு படை வைத்திருக்கிறார். சமீபத்தில் 5 கோடி கேட்டு சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த ராஜஸ்தானை சேர்ந்தவரை போலீசார் கர்நாடகாவில் கைது செய்தனர்.
இந்த நிலையில் ஷாருக்கானுக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளது. மும்பை பாந்திரா போலீஸ் நிலையத்துக்கு சத்தீஷ்கார் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து பைசன் கான் என்பவர் போனில் பேசியுள்ளார். “50 லட்சம் தரவில்லை எனில் நடிகர் ஷாருக்கானை கொலை செய்துவிடுவேன். அவர் தொலைபேசி எண் என்னிடம் இல்லை. அதனால்தான் உங்களிடம் இதனை கூறுகிறேன். நீங்களே வாங்கி கொடுத்து விடுங்கள்” என்று கூறியுள்ளார்.
இந்த கொலை மிரட்டலை அடுத்து பாந்திரா பேண்டு ஸ்டாண்டு பகுதியில் உள்ள ஷாருக்கானின் வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை பிடிக்க ராய்ப்பூருக்கு விரைந்தனர். கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட போன் நம்பர் பைசன் கான் என்பவருக்கு சொந்தமானது என்று உறுதியானது. இதையடுத்து ராய்பூர் போலீசார் உதவியுடன் அவரை பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர் ஒரு வழக்கறிஞர் என்பது தெரியவந்தது. தனது போன் கடந்த வாரம் தொலைந்து விட்டதாகவும், அதன் மூலம் மர்ம ஆசாமி எனது பெயரை பயன்படுத்தி மிரட்டல் விடுத்து இருக்கலாம் என்றும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.