ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா, ராய் அபிஷேக் பச்சன் தம்பதிக்கு 2007ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஆரத்யா என்ற மகள் உள்ளார். திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி வேடத்தில் நடித்திருந்தார்.
கடந்த சில மாதங்களாகவே ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் விவாகரத்து செய்ய போவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் திருமணத்தின் போது தனது கைவிரலில் அபிஷேக் பச்சன் அணிந்த மோதிரத்தை கழட்டி இருந்தார் ஐஸ்வர்யா ராய். ஆனால் அதையடுத்து இந்த விவாகரத்து குறித்த கேள்விக்கு ஒரு பேட்டியில் மறுப்பு தெரிவித்திருந்தார் அபிஷேக் பச்சன்.
என்றாலும் அந்த செய்தி தொடர்ந்து பரவி வந்தது. அதனால் அந்த சர்ச்சைக்கு நிரந்தர முடிவு கட்டும் விதமாக தற்போது மீண்டும் அந்த மோதிரத்தை தனது விரலில் அணிந்தபடி பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் ஐஸ்வர்யாராய்.