‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

மேற்கு வங்க மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒரு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக ஹிந்தி நடிகை ஆலியா பட் வெளியிட்ட பதிவில், ‛‛மீண்டும் ஒரு கொடூரமான பாலியல் வன்கொடுமை. பெண்கள் பாதுகாப்பாக இல்லை. 2022 முதல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகி உள்ளது. மருத்துவ துறையிலேயே இப்படி நடப்பது பயமாக உள்ளது. ஒரு நாளைக்கு 90 பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்களின் பாதுகாப்பு சுமையாகி உள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்கள் பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள், பாதுகாப்பை அதிகப்படுத்துங்கள். தற்போதைய சூழலில் ஏதோ ஒரு பெரிய தவறு இருக்கிறது என நினைக்கிறேன். அதன் மூலகாரணத்தை கண்டறிந்து அதை சரி செய்யும் வரை இங்கு எதுவும் மாறாது'' என்கிறார்.




