நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் கருத்துகளை ஆதரித்தும், எதிர்கட்சி கருத்துகளை விமர்சித்தும் வந்த கங்கனா நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தான் பிறந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தல் உள்ள மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது எம்.பி ஆகியுள்ள அவர் விரைவில் அமைச்சராகும் சாத்தியகூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் எம்.பி., என்கிற வகையில் தன்னை சந்திக்க வருகிறவர்களுக்கு புதிய நிபந்தனைகளை விதித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இமாச்சல பிரதேசத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். எனவே என்னை சந்திக்க வரும் தொகுதி மக்கள் ஆதார் அட்டையுடன் வர வேண்டும். தொகுதி மக்கள் என்னை மண்டியில் உள்ள அலுவலகத்தில் சந்திக்கலாம். மாநில மக்கள் மணாலியில் உள்ள அலுவலகத்தில் சந்திக்கலாம். வருகையின் நோக்கம் மற்றும் விஷயமும் முன்னரே எழுதி அனுப்ப வேண்டும். கூட்டத்தையும், நேரம் வீணாவதை தடுக்கவுமே இந்த ஏற்பாடு என்று கூறியுள்ளார்.
அடையாள அட்டை இல்லாத அனைத்து தரப்பு மக்களையும் மக்கள் பிரதிநிதிகள் சந்திக்க வேண்டும். அது அவர்களது பொறுப்பு. அதைவிடுத்து அடையாள அட்டையுடன் வர வேண்டும் என்று கூறுவது சரியல்ல என்று எதிர்கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள்.