ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் வீடு அருகே துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அவரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்று பதிவு செய்தனர்.
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான், மும்பை பந்த்ராவில் கேலக்ஸி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே கடந்த ஏப். 14-ல் அதிகாலை 5 மணியளவில் பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடினர். இதில் யாருக்கும் காயமில்லை.
இந்தசம்பவ குறித்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி விக்கி குப்தா(24), சாகர்பால்(21) ஆகிய இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
இந்த வழக்கில் இன்று மும்பை குற்றப்பிரிவு போலீசார் நடிகர் சல்மான்கானிடம் வாக்குமூலம் பெற்று பதிவு செய்தனர். கடந்த 4-ம் தேதி அவரது சகோதரரிடம் அர்பாஸ் கானிடமும் வாக்குமூலம் பெற்றனர்.