மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பிரபல போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே, 27. தீவானாபேன் என்ற போஜ்புரி படத்தில் நடித்தார். சில ஹிந்தி படங்கள் மற்றும் டிவி ஷோக்களிலும் நடித்துள்ளார். கணவர் சந்திரமணி ஜன்கட் உடன் மும்பையில் இவர் வசித்து வந்தார். தனது சகோதரியின் திருமணத்திற்காக பீஹாரில் உள்ள பாகல்பூருக்கு வந்திருந்தார். குடும்பத்தினர் உடன் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கிய நிலையில் மின்விசிறியில் தூக்கிட்டு அம்ரிதா தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தற்கொலை செய்வதற்கு முன் அம்ரிதா தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில், ‛‛அவளது வாழ்க்கை இரு படகுகளில் இருக்கிறது. என் படகை மூழ்கடித்து அவள் வாழ்க்கையை எளிதாக்கினேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
அம்ரிதாவின் தற்கொலை பற்றி குடும்பத்தினர் கூறுகையில், போதிய பட வாய்ப்பு இல்லாததால் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார். அதனால் கூட தற்கொலை செய்திருக்கலாம் என்கிறார்கள்.