25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் நவாசுதீன் சித்திக். தமிழில் 'பேட்ட' படத்திலும் நடித்திருக்கிறார். இவரது மனைவி ஆலியா சித்திக். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆலியா கணவரை பிரிந்து தனது குழந்தைகளுடன் துபாயில் வசித்து வருகிறார்.
கடந்த 2020ம் ஆண்டு ஆலியா தனது கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து குழந்தைகளை தனது கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி நவாசுதின் சித்திக் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் இருவரையும் சமரசமாகச் செல்லும்படி கேட்டுக்கொண்டது. இந்த நிலையில் தற்போது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நவாசுதீனுடன் சேர்ந்து வாழ ஆலியா முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து ஆலியா கூறும்போது "எங்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு மூன்றாம் நபர்கள்தான் காரணம் என்று நினைக்கிறேன். தவறான புரிதல்கள் எங்கள் வாழ்வில் தற்போது இல்லை. எங்கள் குழந்தைகளுக்காக நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளோம். இருவருக்கும் இடையில் கெட்ட நினைவுகள் இருந்தாலும் சில அழகிய அன்பான தருணங்களும் இருக்கின்றன. நாங்கள் அந்த இனிமையான தருணங்களையே எடுத்துக்கொண்டு திருமண வாழ்க்கையைத் தொடர முடிவு செய்திருக்கிறோம்" என்கிறார்.
சமரசத்திற்கு பிறகு நவாசுதீனும், ஆலியாவும் தங்களது 14வது திருமண நாளை துபாயில் கொண்டாடி உள்ளனர். அந்த படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.