தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் | மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! | ''தமிழன் பிரதமராக முடியுமா? அதற்கு தயாராக இருக்கணும்'': கமல்ஹாசன் பேச்சு |
நடிகை பூனம் பாண்டே நேற்று முன்தினம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக இறந்து விட்டதாக அவருடைய மேலாளர் ஒரு அதிர்ச்சி செய்தி வெளியிட்டு இருந்தார். ஆனால் நேற்று நடிகை பூனம் பாண்டே தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் உயிருடன் இருப்பதாகவும், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே அப்படி செய்ததாக ஒரு செய்தி வெளியிட்டவர், நான் வெளியிட்ட அந்த செய்தி யார் மனதையாவது பாதித்திருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார் .
அவருடைய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஒரு நோய்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டு விளம்பரம் தேடிக் கொள்ள முயற்சிப்பது ஒரு கீழ்த்தரமான செயல் என்று நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள்.
அதோடு கடந்த 2000ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப பிரிவு சட்டப்படி, சோசியல் மீடியாவில் பொய்யான தகவலை பரப்பினால் மூன்றாண்டு சிறை தண்டனையும், மீண்டும் அதே தவறை செய்தால் ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. அதோடு அவர்களுக்கு 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இப்படி ஒரு பொய் செய்தியை பரப்பிய நடிகை பூனம் பாண்டேவுக்கு மூன்று சிறை தண்டனை கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் பலரும் சோசியல் மீடியாவில் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.