மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகை ராஷ்மிகா மந்தனா குறுகிய காலத்தில் தென்னிந்திய அளவில் புகழ்பெற்று அதன் மூலம் பாலிவுட்டிலும் நுழைந்து தற்போது அங்கேயும் பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரன்பீர் கபீருடன் அவர் இணைந்து நடித்த அனிமல் என்கிற திரைப்படம் வெளியாகி ஆயிரம் கோடி வசூலை நெருங்கி கொண்டிருக்கிறது. பட வெளியீட்டுக்கு முன் படம் வெளியாகும் சந்தோஷத்தில் இருந்த ராஷ்மிகாவுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் அவரைப்போன்றே மார்பிங் செய்து உருவாக்கப்பட்ட ஒரு ஆபாச வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு திரையில் இருந்து அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலரும் கண்டனங்கள் தெரிவித்து ராஷ்மிகாவுக்கும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதன் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த நிலையில் இந்த வீடியோ வெளியானதன் பின்னணியில் செயல்பட்ட நான்கு பேரை டில்லி போலீசார் கைது செய்துள்ளனர். அதே சமயம் இவர்களது பின்னணியில் மாஸ்டர் மைண்ட் ஆக இருந்து செயல்பட்ட நபர்களையும் கண்டுபிடிக்கும் விதமாக விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர் போலீசார்.