மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரும் 'மின்சார கனவு, விஐபி 2' தமிழ்ப் படங்களில் நடித்தவர் கஜோல். அவருக்கு ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கனுடன் திருமணம் நடந்து டீன் ஏஜ் வயதில் ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். தற்போதும் ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை மட்டும் 'மார்பிங்' செய்து 'ஏஐ' தொழில்நுட்பம் மூலம், வேறு ஒருவரது ஆபாசமான வீடியோவைப் பகிர்ந்தது சமூக வலைத்தளங்களில் வைரலானது. அது குறித்து பல சினிமா பிரபலங்களும் கண்டனங்களைத் தெரிவித்தனர். வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகை கஜோலின் வீடியோ ஒன்றை அது போல மார்பிங், ஏஐ செய்து வெளியிட்டுள்ளனர். மூன்று மாதம் முன்பு வெளியான அந்த போலி ஆபாச வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மற்றொரு பாலிவுட் நடிகையான கத்ரினா கைப் வீடியோவும் இது போல வெளியிடப்பட்டுள்ளது. இது போன்ற வீடியோக்களை வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.