ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரும் 'மின்சார கனவு, விஐபி 2' தமிழ்ப் படங்களில் நடித்தவர் கஜோல். அவருக்கு ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கனுடன் திருமணம் நடந்து டீன் ஏஜ் வயதில் ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். தற்போதும் ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை மட்டும் 'மார்பிங்' செய்து 'ஏஐ' தொழில்நுட்பம் மூலம், வேறு ஒருவரது ஆபாசமான வீடியோவைப் பகிர்ந்தது சமூக வலைத்தளங்களில் வைரலானது. அது குறித்து பல சினிமா பிரபலங்களும் கண்டனங்களைத் தெரிவித்தனர். வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகை கஜோலின் வீடியோ ஒன்றை அது போல மார்பிங், ஏஐ செய்து வெளியிட்டுள்ளனர். மூன்று மாதம் முன்பு வெளியான அந்த போலி ஆபாச வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மற்றொரு பாலிவுட் நடிகையான கத்ரினா கைப் வீடியோவும் இது போல வெளியிடப்பட்டுள்ளது. இது போன்ற வீடியோக்களை வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.