தள்ளிப்போகிறது ஜிவி பிரகாஷின் இரண்டு படங்கள்? | பெண் கூறிய குற்றச்சாட்டுக்கு விஜய்சேதுபதி பதில் | '3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? |
புதுடில்லி: பழம்பெரும் ஹிந்தி நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இவருக்கு வயது 85.
இந்தியாவில் சினிமா கலைஞர்களுக்கு மிக உயர்ந்த விருதாக வழங்கப்படுவது தாதா சாகேப் பால்கே விருது. இதற்கு முன்னர் சிவாஜி கணேசன், கே பாலசந்தர், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், லதா மங்கேஷ்கர், கே விஸ்வநாத் உள்ளிட்ட ஏகப்பட்ட திரைக்கலைஞர்கள் இந்த விருதை வென்றுள்ளனர். இந்தாண்டுக்கான விருது வஹீதா ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்தவர் வஹீதா ரஹ்மான். 1960, 70களில் சினிமாவில் நடிகையாக பிரபலமானார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி போன்ற மொழிகளில் நடித்துள்ள வஹீதா, தமிழில் எம்ஜிஆர் நடித்த அலிபாபுவும் 40 திருடர்கள் படத்திலும் நடித்தார். கடைசியாக கமலின் விஸ்வரூபம்-2 படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் வஹீதா ரஹ்மானுக்கு இந்தாண்டுக்கான புகழ்மிக்க 'தாதா சாகேப் பால்கே' வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.