நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
புதுடில்லி: பழம்பெரும் ஹிந்தி நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இவருக்கு வயது 85.
இந்தியாவில் சினிமா கலைஞர்களுக்கு மிக உயர்ந்த விருதாக வழங்கப்படுவது தாதா சாகேப் பால்கே விருது. இதற்கு முன்னர் சிவாஜி கணேசன், கே பாலசந்தர், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், லதா மங்கேஷ்கர், கே விஸ்வநாத் உள்ளிட்ட ஏகப்பட்ட திரைக்கலைஞர்கள் இந்த விருதை வென்றுள்ளனர். இந்தாண்டுக்கான விருது வஹீதா ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்தவர் வஹீதா ரஹ்மான். 1960, 70களில் சினிமாவில் நடிகையாக பிரபலமானார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி போன்ற மொழிகளில் நடித்துள்ள வஹீதா, தமிழில் எம்ஜிஆர் நடித்த அலிபாபுவும் 40 திருடர்கள் படத்திலும் நடித்தார். கடைசியாக கமலின் விஸ்வரூபம்-2 படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் வஹீதா ரஹ்மானுக்கு இந்தாண்டுக்கான புகழ்மிக்க 'தாதா சாகேப் பால்கே' வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.