இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஹிந்தித் திரையுலகத்தில் 1960, 70களில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருந்தவர் தேவ் ஆனந்த். அவருக்கு வட இந்தியாவில் மட்டுமல்லாது தென்னிந்தியாவிலும் எண்ணற்ற ரசிகர்கள் உண்டு. 2011ம் ஆண்டு தனது 88வது வயதில் மறைந்தார்.
பாலிவுட்டில் இருக்கும் பல நடிகர்களிலும் பல்வேறு முதலீடுகளில் ஈடுபடுவது வழக்கம். பிரம்மாண்ட வீடுகளை வாங்குவது, தொழில்களில் ஈடுபடுவது என செய்வார்கள். தேவ் ஆனந்த் உச்சத்தில் இருந்த போது மும்பையின் பல பகுதிகளில் வீடுகளை வாங்கியவர்.
அப்படி அவர் வாங்கிய, மும்பை ஜுஹு பகுதியில் உள்ள ஒரு பங்களா 400 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. அவருடைய குடும்பத்தினர் அந்த பங்களாவை பிரபல ரியல் எஸ்டேட் கம்பெனி ஒன்றிற்கு விற்றுள்ளார்களாம். அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி பணமும் கொடுக்கப்பட்டுவிட்டதாம். அந்த இடத்தில் 28 மாடியில் பிரம்மாண்ட குடியிருப்பு ஒன்றை கட்டப் போகிறார்களாம்.
தமிழ் சினிமாவிலும் தற்போதுள்ள முன்னணி நடிகர்கள் பலரும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள், நிலங்கள் ஆகியவற்றை வாங்கிக் குவித்துள்ளவர்கள்தான்.