ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி |

கிரிக்கெட்டை பற்றி வருடத்திற்கு ஒரு படமாவது வந்து கொண்டுதான் இருக்கிறது. அதிலும் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி வரும் படங்களின் எண்ணிக்கை வெகு குறைவுதான். அந்த வகையில் தற்போது பாலிவுட்டில் அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியாகி உள்ள கூமர் திரைப்படம் பெண் கிரிக்கெட் வீராங்கனை ஒருவரின் போராட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்த படத்தில் அபிஷேக் பச்சன் கிரிக்கெட் கோச் ஆக நடித்துள்ளார். விபத்தில் தனது வலது கையை இழந்த ஒரு பெண், கிரிக்கெட்டில் சாதிக்க துடிப்பதையும் அவருக்கு எப்படி அபிஷேக் பச்சன் ஒரு கோச்சாக, பக்கபலமாக நின்று சாதிக்க உதவுகிறார் என்பதும்தான் இந்த படத்தின் கதை.
படம் வெளியானதில் இருந்தே பாசிட்டி விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர கிரிக்கெட் வீரருமான வீரேந்திர சேவக் இந்த படத்தை பார்த்துவிட்டு தனது பாராட்டுகளை வெளிப்படுத்தியுள்ளார். “கிரிக்கெட்டை பற்றிய படங்கள் ரொம்பவே குறைவாகத்தான் வருகின்றன. அதனால் தான் இந்த படம் வெளியானதும் உடனடியாக பார்த்து விட்டேன். பொதுவாக நான் ஸ்பின்னர்களை பெரிதாக மதிப்பதில்லை. ஆனால் இந்த படத்தின் நாயகி ஸ்பின் பால் போடும்போது வியந்து போனேன்.
அதேபோல பயிற்சியின் போது கோச் சொல்லிக் கொடுப்பதையும் நான் பெரிதாக கவனிக்க மாட்டேன். ஆனால் இந்த படத்தில் ஒரு கோச்சாக தன் பக்கம் கவனத்தை திருப்பும்படி செய்துள்ளார் அபிஷேக் பச்சன். கிரிக்கெட் விரும்பிகள் இந்த படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இவரது பாராட்டுக்கு அபிஷேக் பச்சன் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.