ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் | வார்-2வில் ஹிருத்திக் ரோஷனை விட அதிக சம்பளம் யாருக்குத் தெரியுமா? | மஞ்சு வாரியரா? காவ்யா மாதவனா? : பெண் நடுவரை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகர் | ஸ்ரீதேவிக்கு ராம் கோபால் வர்மா கொடுத்த ‛டயட் டார்ச்சர்' : சால்பாஸ் இயக்குனர் பகீர் குற்றச்சாட்டு | படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் |
சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் ஆதிபுருஷ் திரைப்படம் வெளியானது. ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில் பிரபாஸ் ராமனாகவும், கிர்த்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளனர். சைப் அலிகான் ராவணனாகவும், சன்னி சிங் லட்சுமணன் ஆகவும், தேவதத்தா நாகே அனுமன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். இதற்கு முன்னதாக மூன்று முறை சீதா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்ற நடிகை ஜெயப்பிரதா ஆதிபுருஷ் படம் பார்த்துவிட்டு தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “பிரபாஸ் மற்றும் கிர்த்தி சனோன் இருவரும் ராமர், சீதாவாக பொருத்தமான தேர்வாக இருக்கின்றனர். ஆனால் அனுமன் கதாபாத்திர தோற்றமும் அதில் நடித்தவரும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கத் தவறிவிட்டார். பொதுவாக கடவுள் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு பொதுவெளியிலும் சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு கிளீன் இமேஜ் இருக்க வேண்டும். பிரபாஸை ஆந்திராவில் ரசிகர்கள் கடவுளாகவே பார்க்கின்றனர் .
அதுமட்டுமல்ல எனக்கும் அது போன்று ஒரு பிம்பம் மக்களிடம் இருந்ததால்தான் நான் மூன்று முறை சீதா கதாபாத்திரத்தில் நடிக்க முடிந்தது. மக்களும் ஒவ்வொரு முறையும் அதை உள்ளன்போடு ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் இன்றைய சூழலில் கிளீன் இமேஜ் என்பதற்கான வரைமுறையும் நடைமுறையும் ரொம்பவே மாறிப்போய்விட்டது” என்று கூறியுள்ளார் ஜெயப்பிரதா.