என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

கோபிசந்த், ராஷி கண்ணா நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான 'ஜில்' என்ற தெலுங்கு படம் மூலம் நடிகரானவர் கபீர் துஹான் சிங். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த 'வேதாளம்' படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தார். வேதாளத்தை அடுத்து றெக்க, காஞ்சனா 3, அருவம், ஆக்ஷன், தெற்கத்தி வீரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது மாராத்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
கபீர் துஹான் சிங்கிற்கும், அவரது உறவுக்கார பெண்ணான ஹரியானாவை சேர்ந்த ஆசிரியை சீமா சாஹலுக்கும் திருமணம் நடந்தேறியுள்ளது. டில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இவர்களது திருமணம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
திருமண படங்களை வெளியிட்டுள்ள கபீர் சிங் “இது காதல் திருமணம் அல்ல, பெரியவர்கள் பார்த்து முடிவு செய்த திருமணம். எனது குடும்பம் பெரியது. அதனை தலைமையேற்று கவனித்துக் கொள்ளவும், எனது தொழிலை புரிந்து கொண்டு எனக்கு துணையாக இருக்கவும் ஒரு பெண்ணை விரும்பினேன். அப்படியொரு பெண்ணை எனக்காக தேர்வு செய்திருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.