‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கரண் ஜோஹர். 1998ம் ஆண்டு வெளியான 'குச் குச் ஹோதா ஹை' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து “கபி குஷி கபி காம், கபி அல்விதா நா கெஹ்னா, மை நேம் இஸ் கான், ஸ்டூடன்ட் ஆப் த இயர், பாம்பே டாக்கீஸ், ஏ தில் ஹை முஷ்கில்,” ஆகிய படங்களை மட்டுமே கடந்த 25 ஆண்டுகளில் இயக்கியுள்ளார். ஆனால், 50 படங்கள் வரையிலும் தயாரித்துள்ளார். டிவியிலும் தொடர்ந்து சில பிரபலமான நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக இருந்திருக்கிறார்.
கரண் ஜோஹர் தற்போது இயக்கி வரும் 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' என்ற படத்தின் டீசர் நேற்று வெளியானது. சினிமாவில் கரணின் 25வது ஆண்டில் வெளியாகியுள்ள அந்த டீசரைப் பகிர்ந்து நடிகர் ஷாரூக்கான், “வாவ் கரண் ஜோஹர்…திரைப்பட உருவாக்குனராக 25 ஆண்டுகள்…நீ நீண்ட தூரம் வந்துவிட்டாய் பேபி…உனது தந்தையும் எனது நண்பருமான டாம் அங்கிள் இதை சொர்க்கத்தில் இருந்து பார்த்து மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உணர்வார். உங்களிடம் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன், நீங்கள் இன்னும் நிறைய நிறைய படங்களை இயக்க வேண்டும். வாழ்க்கையில் காதலின் மேஜிக்கைக் கொண்டு வர நீங்கள் தேவை. அது உங்களால் மட்டுமே முடியும்.. 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' டீசர் அழகாக உள்ளது. உங்களுக்கும் குழுவினருக்கும் எனது அன்பான வாழ்த்துகள்,” எனப் பாராட்டியுள்ளார்.