பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ஹிந்தி, தெலுங்கு, தமிழ், ஹாலிவுட் ஆகிய மொழி படங்களில் நடித்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "ஹிந்தி சினிமா மாபியாக்கள் கையில் உள்ளது. அவர்கள் என்னை ஓரம் கட்டினர் என்றும், அந்த அரசியலை தாக்குப்பிடிக்க முடியாமல் தான் நான் ஹாலிவுட்டுக்கு சென்றுவிட்டேன்'' என்றும் கருத்து தெரிவித்தார். இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இத்தனை நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு இப்போது எதற்காக பிரியங்கா சோப்ரா இவ்வாறு பேசினார் என இணையதள வாசிகள் கேள்விகள் எழுப்பினர்.
இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக பிரியங்கா சோப்ரா கூறியது, "ஒரு நிகழ்ச்சியில் எனது சினிமா வாழ்க்கை பயணம் பற்றி கேட்டனர். இதனால் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு விஷயத்தையும் வெளிப்படையாக தெரிவித்தேன். ஹிந்தி பட உலக மாபியா கும்பல் பற்றிய உண்மையை சொன்னேன். நான் எதிர்கொண்ட அந்த வலிகளை பற்றி பேச எனக்கு இப்போதுதான் தைரியம் வந்துள்ளது. நான் அனுபவித்த கஷ்டங்களை தைரியமாக இந்த உலகிற்கு சொல்கிற நிலையில் இன்று நான் இருக்கிறேன்'' என கூறியுள்ளார்.