நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
கடந்த 2020ல் கொரோனா முதல் அலை ஆரம்பித்த சமயத்தில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் வரை அதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சாமானியர்கள் பலருக்கும் போக்குவரத்து, உணவு, கல்வி, மருத்துவம், விவசாயம் என வெவ்வேறு விதமான உதவிகளை வழங்கியவர் பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அவரை ரியல் ஹீரோவாகவே போற்றி புகழ ஆரம்பித்து விட்டனர். இன்னும் சில ஒரு படி மேலே சென்று அவருக்காக மிகப்பெரிய சிலைகள் அமைப்பதும் அடுத்த கட்டமாக சில இடங்களில் அவருக்காக கோவில் கட்டவும் கூட ஆரம்பித்தனர்.
அப்படி தெலங்கானா மாநிலத்தில் உள்ள சித்திபேடில் அவருக்காக ரசிகர்களால் கட்டப்பட்டிருந்த கோவிலுக்கு சமீபத்தில் வருகை தந்தார் சோனு சூட். அதேசமயம், "எனக்கு இதில் உடன்பாடு சிறிதும் இல்லை.. நான் அந்த அளவுக்கு தகுதியானவனும் இல்லை. மக்களை சந்திப்பதற்காக தான் இப்போது கூட நான் வந்தேன். அதேசமயம் என் மீது மக்கள் கொண்ட அன்பின் வெளிப்பாடுதான், இது போன்று சிலைகளாகவும் கோவிலாகவும் அவர்கள் வெளிக்காட்டுகின்றனர் என் மீது அன்பு கொண்டவர்கள் அதை வெளிப்படுத்த வேண்டும் என்றால் கோவிலுக்கு பதிலாக பள்ளிக்கூடங்களும், மருத்துவமனைகளும் கட்டினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நானும் அதுகுறித்து பெருமைப்படுவேன்” என்று கூறியுள்ளார் சோனு சூட்.