தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. தயாரிப்பாளர் தகவல்! | விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள்! | பிரேம் குமார், பஹத் பாசில் படம்... "இன்னொரு ஆவேசம்" தயாரிப்பாளர் தந்த சூப்பர் அப்டேட்! | அருள்நிதி, முத்தையா கூட்டணியில் ‛ராம்போ'.. புதிய பட அறிவிப்பு! | ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியீட்டை தள்ளி வைக்கும் விஜய்! | ‛காந்தாரா: சாப்டர் 1' படத்திற்காக 3 ஆண்டுகள் அர்ப்பணிப்பு: ரிஷப் ஷெட்டி | கல்கி -2 படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இணையும் சாய் பல்லவி! | புலம்பும் புயல் காமெடியன் | ராதிகா தாயார் மறைவு: நேரில் சென்று ஆறுதல் சொன்ன பாரதிராஜா | பிளாஷ்பேக்: தென்னிந்தியத் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் 'சினிமா ராணி' டி பி ராஜலக்ஷ்மி இயக்கிய 'மிஸ் கமலா' |
பாலிவுட் கவர்ச்சி நடிகை உர்ஃபி ஜாவத். குறைவான சினிமாவில் நடித்தாலும், சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியான படங்களை வெளியிட்டு லட்சக்கணக்கானவர்களை பின்தொடர வைத்திருப்பவர். இதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறவர். விதவிதமான இடங்களுக்கு சென்று விதவிதமான ஆபாச உடைகள் அணிந்து தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிடுவார். இதன் மூலம் பல சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார். பல வழக்குகளும் இவர் மீது உள்ளது.
இந்த நிலையில் தற்போது துபாய் சென்றுள்ள உர்ஃபி அங்கு பொதுமக்கள் கூடும் இடத்தில் அனுமதி இன்றி போட்டோ ஷூட் நடத்தி உள்ளார். அதுவும் ஆபாச உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உர்ஃபி இந்திய பிரஜை என்பதால் இந்திய காவல்துறையுடன் கலந்து பேசிய பிறகே அவர் மீது கைது நடவடிக்கை இருக்கும். தற்போது விசாரணை வளையத்திற்குள் மட்டுமே இருக்கிறார். இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டாலோ, அல்லது உர்ஃபி எழுத்துபூர்வமாக மன்னிப்பு கேட்டாலோ அவர் விடுவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.