பிளாஷ்பேக்: இளையராஜா நடித்த படம் | பிளாஷ்பேக்: எம்ஜிஆரை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் | லிப்லாக் காட்சி அவசியம் இல்லை ; அதிர வைக்கும் நடிகர் ஷேன் நிகம் | நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட் கவர்ச்சி நடிகை உர்ஃபி ஜாவத். குறைவான சினிமாவில் நடித்தாலும், சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியான படங்களை வெளியிட்டு லட்சக்கணக்கானவர்களை பின்தொடர வைத்திருப்பவர். இதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறவர். விதவிதமான இடங்களுக்கு சென்று விதவிதமான ஆபாச உடைகள் அணிந்து தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிடுவார். இதன் மூலம் பல சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார். பல வழக்குகளும் இவர் மீது உள்ளது.
இந்த நிலையில் தற்போது துபாய் சென்றுள்ள உர்ஃபி அங்கு பொதுமக்கள் கூடும் இடத்தில் அனுமதி இன்றி போட்டோ ஷூட் நடத்தி உள்ளார். அதுவும் ஆபாச உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உர்ஃபி இந்திய பிரஜை என்பதால் இந்திய காவல்துறையுடன் கலந்து பேசிய பிறகே அவர் மீது கைது நடவடிக்கை இருக்கும். தற்போது விசாரணை வளையத்திற்குள் மட்டுமே இருக்கிறார். இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டாலோ, அல்லது உர்ஃபி எழுத்துபூர்வமாக மன்னிப்பு கேட்டாலோ அவர் விடுவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.