புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்து வருகிறார். அவருக்கும் பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்கோத்ராவும் காதலித்து வருகிறார்கள். இருவரும் தங்களது திருமணம் பற்றி கரண் ஜோஹர் நடத்தும் 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் அறிவித்துள்ளார்கள்.
அவர்களது திருமணம் வரும் ஜனவரி மாதத்தில் நடைபெறலாம் என முன்னர் தகவல் வெளியானது. ஆனால், கியாரா தற்போது படப்பிடிப்புகளில் பிஸியாக நடித்து வருவதால் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திருமணத்தை நடத்த காதல் ஜோடி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகைகள் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்து கொள்ளும் முடிவை எடுத்து வருகிறார்கள். இந்த வருடம் ஆலியா பட், ரன்பீர் கபூர் ஜோடி திருமணம் செய்து குழந்தையும் பெற்றுவிட்டார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் கியாரா அத்வானி நடித்து வரும் 'ஆர்சி 15' படத்திற்கான பாடல் காட்சி ஒன்று நியூசிலாந்தில் படமாகி வந்தது. நேற்றுதான் அப்பாடல் காட்சிக்கான படப்பிடிப்பை முடித்துள்ளார்கள்.