போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

உத்திர பிரதேச மாநிலத்தில் போதை பொருள் தடுப்பு இயக்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் யோகா குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, பாலிவுட் நடிகர் சல்மான் கான் போதை பொருளை பயன்படுத்தியவர். அதேபோல் ஷாருக்கானின் மகன் கூட போதை பொருள் பயன்படுத்தி சில மாதங்களுக்கு முன்பு காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது போன்று பல நடிகர்கள் போதை பொருளை பயன்படுத்துகிறார்கள். மதுபானம் சினிமா, அரசியல் என அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும். ஒட்டுமொத்த இந்தியாவும் போதை பொருளுக்கு அடிமையாவதிலிருந்து விடுபட வேண்டும். இதற்கு இந்தியாவில் உள்ள அனைவரும் தீர்மானம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று யோகா குரு ராம்தேவ் கூறியுள்ளார். இந்த நிகழ்வில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் போதைப்பொருள் பயன்படுத்தியவர் என்று அவர் வெளியிட்ட தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.