ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் |
உத்திர பிரதேச மாநிலத்தில் போதை பொருள் தடுப்பு இயக்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் யோகா குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, பாலிவுட் நடிகர் சல்மான் கான் போதை பொருளை பயன்படுத்தியவர். அதேபோல் ஷாருக்கானின் மகன் கூட போதை பொருள் பயன்படுத்தி சில மாதங்களுக்கு முன்பு காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது போன்று பல நடிகர்கள் போதை பொருளை பயன்படுத்துகிறார்கள். மதுபானம் சினிமா, அரசியல் என அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும். ஒட்டுமொத்த இந்தியாவும் போதை பொருளுக்கு அடிமையாவதிலிருந்து விடுபட வேண்டும். இதற்கு இந்தியாவில் உள்ள அனைவரும் தீர்மானம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று யோகா குரு ராம்தேவ் கூறியுள்ளார். இந்த நிகழ்வில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் போதைப்பொருள் பயன்படுத்தியவர் என்று அவர் வெளியிட்ட தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.