பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் | 'பென்ஸ்' படத்தில் இணையும் ஹரிஷ் கல்யாண், மூன்று நாயகிகள் | ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா | பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான ‛அகண்டா 2' அறிமுக டீசர் | தந்தையின் இறுதிச்சடங்கு.. ஸ்ட்ரெச்சரில் வந்த தாய் ; கதறியழுத வில்லன் நடிகர் | வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ? | நயன்தாரா படத்தை தொடர்ந்து திலீப் படத்தை இயக்கும் வாரிசு நடிகர் | செல்வத்தைத் தருவாரா 'குபேரா' ? திரையுலகம் எதிர்பார்ப்பு… | ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் |
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தோற்றுவித்தவர் கே.பி.ஹெட்கேவர். இவரது வாழ்க்கை இப்போது சினிமாவாக தயாரிக்கப்படுகிறது. சஞ்சய்ராஜ் கவுரிநந்தன் இயக்கும் இப்படத்தில் தேசிய விருது பெற்ற அனுப் ஜலோட்டா நடிக்கிறார். அவருடன், ஜஸ்வீர் சிங், ராகுல் ஜோஷி, எல்.நித்தேஷ் குமார் மற்றும் ஜெயானந்த் ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். இந்தி, மராத்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.
"எங்கள் திரைப்படம் ஹெட்கேவரின் வாழ்க்கை பயணம், அவரது போராட்டங்கள் மற்றும் அவரது இயக்கங்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமையும். ஆர்எஸ்எஸ் இன்று உலகின் மிகப்பெரிய சமூக அமைப்புகளில் ஒன்றாக உள்ளது. ஆனால் அது கடுமையான பாதைகளை கடந்து வந்துள்ளது. அதனை பற்றி இந்த படம் பேசும்” என்கிறார் இயக்குனர் சஞ்சய்ராஜ்.