புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பாலிவுட்டில் அடுத்து எதிர்பார்க்கப்படும் படமாக 'பிரம்மாஸ்திரா' படம் இருக்கிறது. அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப்பச்சன், நாகார்ஜுனா, மவுனி ராய் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தைத் தென்னிந்தியாவில் 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' புகழ் இயக்குனர் ராஜமவுலி வெளியிடுகிறார். இப்படத்தின் தயாரிப்பில் கரண் ஜோஹர் இருப்பதாலும், வாரிசு ஜோடிகளான ரன்பீர், ஆலியா இருப்பதாலும் 'பாய்காட்' சர்ச்சையில் இந்தப் படமும் சிக்கியுள்ளது.
இதனிடையே, இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில், ஜுனியர் என்டிஆர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ராஜமவுலி பேசுகையில், “ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அயன் முகர்ஜி பற்றியும், இந்தப் படம் பற்றியும் என்னிடம் கரண் ஜோஹர் பேசினார். அவர் மீதுள்ள மரியாதையால் படத்தைப் பற்றிக் கேட்டேன். அயன் முகர்ஜி 'அஸ்திரங்கள்' பற்றிப் பேசியதும் என்னுடைய சிறிய வயது பேண்டஸி விஷயங்கள் ஞாபகம் வந்து போனது. அது பற்றி நிறைய உழைத்து எழுதியிருக்கிறார் அயன். இந்த மாதிரியான படங்களுக்கு ஆதரவு கொடுத்தாக வேண்டும்.
நமது கலாச்சாரத்தில் உள்ள சூப்பர் பவர், கதைகளைப் பற்றிய படம் இது. இந்திய கலாச்சாரத்தில் உள்ள அனைத்தையும் பற்றிய படம்தான் இந்த 'பிரம்மாஸ்திரா'. அதனால்தான் இந்தப் படத்தை தென்னிந்தியாவில் வெளியிடுகிறேன்,” எனக் கூறியுள்ளார்.