காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
அசாமிய திரைத்துறையில் முன்னணி இளம் நடிகராக இருந்தவர் கிஷோர் தாஸ். நடிகர் மட்டுமல்லாது முன்னணி அசாமிய பாடகரும்கூட. 300க்கும் மேற்பட்ட இசை ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறார். கடைசியாக 'தாதா துமி டஸ்டோ போர்' என்ற அசாமிய படத்தில் நடித்து இருந்தார்.
31 வயதான கிஷோருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதற்காக கவுகாத்தியில் சிகிச்சை பெற்று வந்த அவர் மேல் சிகிச்சைக்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை கொண்டு வரப்பட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதனால் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் அசாம் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அசாம் முதல்வரின் வேண்டுகோள்படி சென்னையிலேயே கிஷோரின் இறுதி சடங்குகளை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்து கொடுத்தது.