எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு |
அசாமிய திரைத்துறையில் முன்னணி இளம் நடிகராக இருந்தவர் கிஷோர் தாஸ். நடிகர் மட்டுமல்லாது முன்னணி அசாமிய பாடகரும்கூட. 300க்கும் மேற்பட்ட இசை ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறார். கடைசியாக 'தாதா துமி டஸ்டோ போர்' என்ற அசாமிய படத்தில் நடித்து இருந்தார்.
31 வயதான கிஷோருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதற்காக கவுகாத்தியில் சிகிச்சை பெற்று வந்த அவர் மேல் சிகிச்சைக்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை கொண்டு வரப்பட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதனால் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் அசாம் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அசாம் முதல்வரின் வேண்டுகோள்படி சென்னையிலேயே கிஷோரின் இறுதி சடங்குகளை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்து கொடுத்தது.