பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் | திருநெல்வேலி செல்ல பாஸ்போர்ட் கேட்கும் மாரிசெல்வராஜ் | முதல்ல திருமண மண்டபம் : வேகமெடுக்கும் நடிகர் சங்க பணிகள் | படை தலைவன் படத்தில் விஜயகாந்த் காட்சிக்கு வரவேற்பு | இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் |
மேற்கு வங்காளத்தை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை பல்லவி டே. ஏராளமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். ரேஷம் ஜான்பி , அமி சிராஜிர் பேகம், மன் மானே நா ஆகியவை அவர் நடித்த முக்கியமான தொடர்கள்.
25 வயதான பல்லவி, கோல்கட்டா நகரின் கர்பா பகுதியில் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அவர் படப்பிடிப்புக்கு வராததால் படப்பிடிப்பு குழுவினர் அவரது வீட்டுக்கு சென்று தேடி உள்ளார். அப்போது அவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பல்லவி தற்கொலை செய்யவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.