சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை |
இந்திய அளவில் பாலிவுட்டில் எடுக்கப்படும் ஹிந்திப் படங்கள்தான் வசூல் ரீதியாக பல சாதனைகளைப் படைக்கும். ஆனால், இந்த 2022ம் வருடத்தில் இரண்டு தென்னிந்தியப் படங்கள் தான் வசூல் சாதனை படைத்துள்ளது. 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' இரண்டு படங்களுமே மிகப் பெரும் வசூலைக் குவித்தது.
இது குறித்து ஏற்கெனவே ராம்கோபால் வர்மா சில பல கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இப்போது மீண்டும் கிண்டலான ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார். “தெலுங்கு, கன்னடப் படங்கள் ஹிந்திப் படங்களை கோவிட் வைரஸ் போல நோய்த் தொற்றுக்கு ஆளாக்கிவிட்டன. பாலிவுட் விரைவில் தடுப்பூசியுடன் வரும் என எதிர்பார்க்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகரான ஷாகித் கபூர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'ஜெர்சி' படம் பாக்ஸ் ஆபீசில் தோல்வியடைந்துவிட்டது. கடந்த சில மாதங்களாகவே பாலிவுட்டில் 'காஷ்மீர் பைல்ஸ்' தவிர வேறு எந்தப் படமும் வசூலைத் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.