ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி |

சர்வதேச பேட்மிட்டன் வீரரான பிரகாஷ் படுகோனேவின் மகள் தான் தீபிகா படுகோனே. பிரகாஷ் படுகோனே பல சர்வதேச பேட்மிட்டன் போட்டிகளில் கலந்து கொண்டு கோப்பைகளை வென்றிருக்கிறார். இந்திய அரசின் அர்ஜுனா, பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ள அவர் தற்போது ஒலிம்பிக் கமிட்டியில் இருக்கிறார்.
தீபிகாவும் அடிப்படையில் பேட்மிட்டன் வீராங்கணை தான். பொழுதுபோக்கிற்காக மாடலிங் துறையில் நுழைந்தவர் அப்படியே சினிமா நடிகை ஆகிவிட்டார். பாலிவுட் மட்டுல்லாது ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடித்த கெஹரையன் படம் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டாலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்றதை 83 என்ற திரைப்படமாக தயாரானது. அதன் தயாரிப்பாளர்களில் ஒருவர் தீபிகா. இப்போது தனது தந்தையின் வாழ்க்கையை சினிமாவாக்கும் முயற்சியில் இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வெல்வதற்கு முன்பே என் தந்தை விளையாட்டு துறையில் இந்தியாவின் பெயரை உலக வரைபடத்தில் இடம்பெறச் செய்தவர். எந்த வசதியும் இல்லாமல் பயிற்சி பெற்று சர்வேதச அளவில் உயர்ந்தவர். பேட்மிட்டன் மைதானம்கூட கிடைக்காமல் காலியாக இருக்கும் திருமண மண்டபங்களில் பயிற்சி மேற்கொண்டார்.
இப்போது இருக்கும் வசதிகள் அப்போது இருந்திருந்தால் என் தந்தையின் சாதனை உலக அளவில் பேசப்பட்டிருக்கும். அவரின் வாழ்க்கையில் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது. அவரது வாழ்க்கையை படமாக்கும் முயற்சியை நண்பர்களுடன் இணைந்து தொடங்கி இருக்கிறேன். என்கிறார்.