வில்லன் ஆன ஒளிப்பதிவாளர் | ஆண்ட்ரியா பட வழக்கு: தணிக்கை குழுவிற்கு நீதிமன்றம் புதிய உத்தரவு | நிர்வாகிகள் பதவி காலம் நீட்டிப்பு ஏன்? கோர்ட்டில் விஷால் விளக்கம் | ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் |
நடிகர் ஷாரூக்கான், தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது ரெட் சில்லீஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கப்பட்ட நிலையில், ஷாரூக்கானின் மகன் ஆர்யன்கான் போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனால், இப்படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. ஆர்யன் கான் ஜாமினில் வெளியில் வந்தவுடன் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது. இந்தப் படத்தில் ஷாரூக்கானுக்கு நாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
இப்படத்திற்கு அடுத்ததாக சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன் உள்ளிட்டோருடன் பதான் என்ற படத்தில் நடிக்கிறார். இதனையும் முடித்துவிட்டு ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஒரு படத்தில் ஷாரூக்கான் நடிக்கவுள்ளார். இப்படத்தில் விக்கி கவுஷன், டாப்ஸி, பொமான் ஹிரானி உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ராஜ்குமார் ஹிரானி இந்தியில் 'முன்னாபாய் எம்பிபிஎஸ்', '3 இடியட்ஸ்', 'பிகே' உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.