எனக்கான போராட்டத்தை அமைதியாக நடத்துகிறேன்: தீபிகா படுகோனே | விருஷபா ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் சூர்யா, வெங்கி அட்லூரி படப்பிடிப்பு | டில்லி முதல்வரை சந்தித்த காந்தாரா சாப்டர் 1 படக்குழு | இங்கிலாந்து பிரதமருடன் அமர்ந்து படம் பார்த்த ராணி முகர்ஜி | 'மெண்டல் மனதில்' என் மனதுக்கு மிக நெருக்கமான படம் : ஜிவி பிரகாஷ் | அடி உதை வாங்கினேன் : ஹீரோவான பூவையார் | ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் |
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பிறந்து வளர்ந்த வீடு தெற்கு டில்லி குல்மோகர் பூங்கா பகுதியில் உள்ளது. அமிதாப் மும்பைக்கு நடிப்பு வாய்ப்பு தேடிச் செல்லும்வரை இங்குதான் வசித்து வந்தார். பல ஆண்டுகள் அமிதாப்பின் தந்தை தேஜி பச்சனும், தாய் ஹரிவன்ஷ்ராய் பச்சனும் இங்கு வாழ்ந்து வந்தனர். பின்னர் அதனை அமிதாப் பூட்டி வைத்திருந்தார்.
இந்த நிலையில் அந்த வீட்டை பக்கத்து வீட்டுக்காரரும், குடும்ப நண்பரும், நெசோன் குழும தலைமை செயல் அதிகாரியுமான அவ்னி பேடருக்கு விற்றுள்ளார். இந்த வீடு 23 கோடி ரூபாய்க்கு பத்திரபதிவு செய்யப்பட்டுள்ளது.
அமிதாப் பச்சனுக்கு மும்பையில் ஏற்கெனவே 5 பங்களா வீடுகள் உள்ளது. இது தவிர சமீபத்தில் அந்தேரி பகுதியில் 31 கோடி ரூபாய்க்கு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் டூபிளக்ஸ் வீடு ஒன்றை வாங்கினார். டில்லி பூர்வீக வீட்டை பராமரிக்க முடியாமல் விற்றுள்ளார். இன்னும் கூடுதல் விலைக்கு பலர் கேட்டும் குடும்ப நண்பருக்கு அதனை விற்றுள்ளார்.