ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பிறந்து வளர்ந்த வீடு தெற்கு டில்லி குல்மோகர் பூங்கா பகுதியில் உள்ளது. அமிதாப் மும்பைக்கு நடிப்பு வாய்ப்பு தேடிச் செல்லும்வரை இங்குதான் வசித்து வந்தார். பல ஆண்டுகள் அமிதாப்பின் தந்தை தேஜி பச்சனும், தாய் ஹரிவன்ஷ்ராய் பச்சனும் இங்கு வாழ்ந்து வந்தனர். பின்னர் அதனை அமிதாப் பூட்டி வைத்திருந்தார்.
இந்த நிலையில் அந்த வீட்டை பக்கத்து வீட்டுக்காரரும், குடும்ப நண்பரும், நெசோன் குழும தலைமை செயல் அதிகாரியுமான அவ்னி பேடருக்கு விற்றுள்ளார். இந்த வீடு 23 கோடி ரூபாய்க்கு பத்திரபதிவு செய்யப்பட்டுள்ளது.
அமிதாப் பச்சனுக்கு மும்பையில் ஏற்கெனவே 5 பங்களா வீடுகள் உள்ளது. இது தவிர சமீபத்தில் அந்தேரி பகுதியில் 31 கோடி ரூபாய்க்கு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் டூபிளக்ஸ் வீடு ஒன்றை வாங்கினார். டில்லி பூர்வீக வீட்டை பராமரிக்க முடியாமல் விற்றுள்ளார். இன்னும் கூடுதல் விலைக்கு பலர் கேட்டும் குடும்ப நண்பருக்கு அதனை விற்றுள்ளார்.