புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், ரஜினிகாந்த்துடன் பேட்ட படத்தில் வில்லனாக நடிதிருந்தார். இவரது தந்தை நவாபுதீன் சித்திக் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்தார். தந்தையின் மீது மிகுந்த பாசம் கொண்ட நவாசுதீன் சித்திக் அவரது பெயரில் மாளிகை ஒன்றை எழுப்ப விரும்பினார்.
உத்தர பிரதேச மாநிலம் புதானாவில் உள்ள தனது தந்தை வாழ்ந்த பாரம்பரிய வீட்டை போலவே பிரமாண்ட மாளிகை ஒன்றை கட்டினார். அவரது நேரடி பார்வையிலும் அவரது ஆலோசனைப்படியும் இந்த மாளிகை உருவானது. கடந்த 5 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த இந்த மாளிகை இப்போது திறக்கப்பட்டு விட்டது.
இதற்கு 'நவாப் பங்களா' என்ற பெயர் சூட்டி உள்ளார். தனது புதிய பங்களாவின் படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நவாசுதீன் "ஒரு நல்ல நடிகர் எப்போதும் கெட்ட மனிதனாக இருக்க முடியாது, ஏனென்றால் அவனது உள்ளதில் உள்ள தூய்மைதான் நல்ல நடிப்பை வெளிப்படுத்தும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.