100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
பாலிவுட் நடிகை கங்கனா தனது மனதில் தோன்றும் கருத்துக்களை துணிச்சலுடன் வெளியிடக்கூடியவர். இந்திய தலைவர்களை கடுமையாக சாடி வந்த கங்கனா இப்போது கனடா பிரதமரையும் விட்டு வைக்கவில்லை.
கனடாவில் கொரோனா தடுப்பூசி சமீபத்தில் கட்டாயமாக்கப்பட்டது. இதை எதிர்த்து அந்த நாட்டு மக்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள். நிலவரம் கலவரமாகவே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு படைகளின் உதவியுடன் தலைமறைவான இடத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கங்கனா இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது: கன்னட பிரதமர் ட்ரூடோ இந்திய எதிர்பார்ளர்களை தொடர்ந்து ஆதரித்து வந்தார். ஊக்குவித்து வந்தார். அவரது நாட்டில் நடக்கும் போராட்டங்களுக்காக அவர் ரகசிய இடத்தில மறைந்துள்ளார். அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளது. கர்மா தனது ஆட்டத்தை தொடங்கி உள்ளது. என்று குறிப்பிட்டிருக்கிறார்.