பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
நடிகை சன்னி லியோன் நடனமாடி கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுபான் மெயின் ராதிகா என்ற ஆல்பம் வெளியானது. இதில் சன்னி லியோன் நடனமாடிய மதுபான் என்ற பாட்டுக்கு அவர் மிகவும் கவர்ச்சிகரமான உடை அணிந்து நடனம் ஆடியுள்ளனர். இந்த ஆல்பம் வெளியிடப்பட்டதிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்திருக்கிறது. குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்த இந்து மத சாமியார்கள் சன்னி லியோனின் இந்த ஆல்பம் இந்து மத உணர்வுகளை புண்படுத்தி உள்ளதாகவும் அருவருக்கத்தக்க ஆட்டத்தை சாதியின் பெயரால் அரங்கேற்றி இருப்பதாகவும் கூறி இருப்பதோடு உடனடியாக இந்த பாடலை நீக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இதையடுத்து மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோதம் மிஸ்ராவும் சன்னி லியோனின் பாடலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இப்படி ஒரு பாடலை ஆடியதற்காக சன்னிலியோன் உள்பட அந்த ஆல்பத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். முக்கியமாக மூன்று நாட்களுக்குள் அந்த ஆல்பத்தில் இருந்து சன்னி லியோனின் அந்த பாடலை நீக்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளார் . அப்படி இல்லை என்றால் காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறார்.
அவரது இந்த எச்சரிக்கையை தொடர்ந்து அந்த ஆல்பத்தை வெளியிட்டுள்ள சரிகம நிறுவனம், மதுபான் தலைப்பு மற்றும் பாடல் வரிகளை அடுத்த மூன்று நாட்களுக்குள் மாற்றுவதாக அறிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், மதுபான் பாடல் ஏற்படுத்திய சர்ச்சை காரணமாகவும் இந்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் இந்த பாட்டின் தலைப்பு மற்றும் பாடல் வரிகளை மாற்றி அமைக்க இருக்கிறோம். பழைய பாட்டுக்கு பதிலாக புதிய பாடல் அமைத்து மூன்று நாட்களில் வெளியிட இருக்கிறோம் என்றும் அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.