புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
1983ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதை மையமாக வைத்து 83 என்ற படம் தயாராகி இன்று (டிச 24) வெளியாகி உள்ளது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் மொழிகளில் வெளியாகி உள்ளது.
இதில் கேப்டன் கபில்தேவ்வாக ரன்வீர் சிங் நடித்துள்ளார், ஸ்ரீகாந்தாக ஜீவா நடித்துள்ளார். கபில்தேவ் மனைவியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். இந்த படத்தில் உலக கோப்பை கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் காட்டப்பட்டு இருப்பதால் அவர்களுக்கு உரிமத் தொகையாக படத் தயாரிப்பு தரப்பில் இருந்து 15 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதை அவர்கள் எதிர்பார்க்காவிட்டாலும், படத் தயாரிப்பு இந்த பரிசை அவர்களுக்கு வழங்கி கவுரவித்தது. இதில் கேப்டன் கபில்தேவுக்கு மட்டும் 5 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா 83ல் உலக கோப்பையை வென்றபோது வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்கிய சம்பளம் 2100 ரூபாய் தான். மொத்த அணிக்கும் சேர்த்து 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் 83 படத்தின் மூலம் அவர்களுக்கு 15 கோடி கிடைத்துள்ளது. ஒரு வெற்றி காலம் கடந்தும் அதற்கான பலனை கொடுத்துக் கொண்டிருக்கும் என்று படத்தில் ஒரு வசனம் வரும். அது இப்போது உண்மையாகி உள்ளது.