பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
நடிகை சமந்தா தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுக்கும் தனக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது தனது சோசியல் மீடியா பக்கத்தில் இருந்து அவரது பெயரை நீக்கினார். இந்த நிலையில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் சோசியல் மீடியாவிலிருந்து தனது கணவரின் பெயரை நீக்கி இருக்கிறார். இது மிகப்பெரிய பரபரப்பை உருவாக்கி இருக்கிறது. அப்படி என்றால் பிரியங்கா சோப்ராவும் தனது கணவர் நிக் ஜோனஸை விவாகரத்துச் செய்யப் போகிறாரா? என்ற கருத்துக்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. ஆனால் அதை மறுக்கும் விதமாக இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்தார். அதோடு பிரியங்காவின் தாயாரும் இதை மறுத்திருந்தார்.
இந்த நிலையில் இதுப்பற்றி பிரியங்கா சோப்ரா அளித்த ஒரு பேட்டியில், ‛‛சமூகவலைதளத்தில் பயனரின் பெயர் என்னுடைய பக்கத்தில் பொருந்த வேண்டும் என்பதற்காக அப்படி செய்தேன். ஆனால் இது இவ்வளவு பெரிய விஷயமாக பார்க்கப்படுவது வேடிக்கையாக இருக்கிறது. சோசியல் மீடியா நண்பர்களே அமைதியாக இருங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆக, இந்த விவகாரம் பெரிதாவதற்கு முன்பே தனது கணவர் நிக் ஜோனஸ்க்கும், தனக்குமிடையே எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிரியங்கா சோப்ரா.