புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
நடிகை சமந்தா தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுக்கும் தனக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது தனது சோசியல் மீடியா பக்கத்தில் இருந்து அவரது பெயரை நீக்கினார். இந்த நிலையில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் சோசியல் மீடியாவிலிருந்து தனது கணவரின் பெயரை நீக்கி இருக்கிறார். இது மிகப்பெரிய பரபரப்பை உருவாக்கி இருக்கிறது. அப்படி என்றால் பிரியங்கா சோப்ராவும் தனது கணவர் நிக் ஜோனஸை விவாகரத்துச் செய்யப் போகிறாரா? என்ற கருத்துக்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. ஆனால் அதை மறுக்கும் விதமாக இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்தார். அதோடு பிரியங்காவின் தாயாரும் இதை மறுத்திருந்தார்.
இந்த நிலையில் இதுப்பற்றி பிரியங்கா சோப்ரா அளித்த ஒரு பேட்டியில், ‛‛சமூகவலைதளத்தில் பயனரின் பெயர் என்னுடைய பக்கத்தில் பொருந்த வேண்டும் என்பதற்காக அப்படி செய்தேன். ஆனால் இது இவ்வளவு பெரிய விஷயமாக பார்க்கப்படுவது வேடிக்கையாக இருக்கிறது. சோசியல் மீடியா நண்பர்களே அமைதியாக இருங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆக, இந்த விவகாரம் பெரிதாவதற்கு முன்பே தனது கணவர் நிக் ஜோனஸ்க்கும், தனக்குமிடையே எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிரியங்கா சோப்ரா.