25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
ஒரு காலத்தில் சினிமா 100 நாட்கள் ஓடினால் கேக் வெட்டி வெற்றி விழா கொண்டாடுவார்கள். இப்போது சீரியில் 100 எபிசோடை கடந்தால் வெற்றியை கொண்டாடுகிறார்கள். காரணம் இப்போது தொடங்கப்படும் பல சீரியல்கள் டிஆர்பியில் உரிய இடத்தை பெறாவிட்டால் ஒளிபரப்பாகும் நேரம் மாற்றப்பட்டு அப்படியே ஓரம்கட்டப்பட்டு காணாமலும் போய்விடுகிறது. எனவே ஒரு தொடர் 100 எபிசோடை ஒரே ஒளிபரப்பு நேரத்தில் கடப்பதே சாதனை ஆகிவிட்டது.
அந்த வரிசையில் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கப்பட்ட ராஜபார்வை தொடர் 100 எபிசோட்களை கடந்து இருக்கிறது. அதில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் இதனை கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
இந்த தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இதில் முனிப் ரகுமான், ராஷ்மி ஜெயராஜ், விகாஷ் சம்பத், கீர்த்தி விஜய், யாழினி ராஜன், ஆர்த்தி ராம்குமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். பார்வையற்ற இளைஞனுக்கும், ஒரு கிராமத்து பெண்ணுக்கும் இடையிலான காதலை மையமாக கொண்ட தொடர்.