கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி | கவியூர் பொன்னம்மாவின் மறைவும் மஞ்சு வாரியரின் நிறைவேறாத ஆசையும் | செப்டம்பர் 27ல் நான்கு முனைப் போட்டி | 'ஜானு பாப்பா' என அழைக்கும் ரசிகர்கள் : ஜான்வி கபூர் மகிழ்ச்சி | பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் |
கடந்த ஆண்டு கலர்ஸ் இந்தி சேனலில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற தொடர் பாரிஸ்டர் பாபு. ஆரா பட்நாகர் படோனி, பர்விஷ் மிஸ்ரா நடித்திருந்தார்கள். சாஷி சுமித் புரொடக்ஷன் தயாரித்திருந்தது. 252 எபிசோட்களை கொண்ட தொடரை சுஷித் சுமீத் மிட்டாய், சுமீத் ஹேமசந்த் மிட்டாய் இயக்கி இருந்தார்கள்.
இது ஒரு பீரியட் கதை. சுதந்திரததிற்கு முன்பு வங்காளத்தில் நடக்கிற மாதிரியான கதை. லண்டனில் சட்டம் படித்து விட்டு திரும்புகிறார் அனிருத் ராய் சவுத்ரி. அப்போது அவரது குடும்பத்திற்குள் நடக்கும் குழந்தை திருமணம், விதவை மறுவாழ்க்கை மறுப்பு, வயதானவருக்கு இளம் பெண்ணை திருமணம் செய்தல் போன்றவற்றை அனிருத் எதிர்த்து போராடுகிற கதை.
இந்த தொடர் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பொம்மி பி.ஏ.பி.எல் என்ற பெயரில் ஒளிபரப்பாகிறது. வருகிற மே 3 முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளிவரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.