300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
சின்னத்திரையில் நீண்டகாலமாக தொகுப்பாளினியாக வலம் வருபவர் அஞ்சனா. இவருக்கென்று ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். நடிகர் கயல் சந்திரனை திருமணம் செய்து கொண்ட அஞ்சனாவிற்கு ஒரு குழந்தை உள்ளது. பல தொகுப்பாளினிகள் சினிமாவிலும் ஆளுமை செலுத்தி வரும் நிலையில் அஞ்சனா தொடர்ந்து சின்னத்திரையிலேயே அங்கம் வகித்து வருகிறார். ஆனபோதும் சினிமா நடிகைகளுக்கு இணையாக தனது சோசியல் மீடியாவில் அவ்வப்போது விதவிதமாக எடுக்கப்பட்ட போட்டோஷுட்களை பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ஒரு ரசிகர், நீண்டகாலமாக சின்னத்திரை பிரபலமாக இருந்தும் உங்களுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லையே? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு அஞ்சனா பதிலளிக்கையில், ''எனக்கு நடிப்பில் அத்தனை ஆர்வம் இல்லை. அதனால் தான் சினிமாவில் நடிப்பது பற்றி யோசிக்கவில்லை. மேலும், சினிமா -சின்னத்திரை என்றெல்லாம் நான் பிரித்து பார்ப்பதுமில்லை. எனக்கான இடம் இதுதான் என்பதால் அதில் எனது பணியை சிறப்பாக செய்வதில் மட்டுமே என்னுடைய கவனம் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது என்றார்.