புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
சின்னத்திரையில் நீண்டகாலமாக தொகுப்பாளினியாக வலம் வருபவர் அஞ்சனா. இவருக்கென்று ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். நடிகர் கயல் சந்திரனை திருமணம் செய்து கொண்ட அஞ்சனாவிற்கு ஒரு குழந்தை உள்ளது. பல தொகுப்பாளினிகள் சினிமாவிலும் ஆளுமை செலுத்தி வரும் நிலையில் அஞ்சனா தொடர்ந்து சின்னத்திரையிலேயே அங்கம் வகித்து வருகிறார். ஆனபோதும் சினிமா நடிகைகளுக்கு இணையாக தனது சோசியல் மீடியாவில் அவ்வப்போது விதவிதமாக எடுக்கப்பட்ட போட்டோஷுட்களை பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ஒரு ரசிகர், நீண்டகாலமாக சின்னத்திரை பிரபலமாக இருந்தும் உங்களுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லையே? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு அஞ்சனா பதிலளிக்கையில், ''எனக்கு நடிப்பில் அத்தனை ஆர்வம் இல்லை. அதனால் தான் சினிமாவில் நடிப்பது பற்றி யோசிக்கவில்லை. மேலும், சினிமா -சின்னத்திரை என்றெல்லாம் நான் பிரித்து பார்ப்பதுமில்லை. எனக்கான இடம் இதுதான் என்பதால் அதில் எனது பணியை சிறப்பாக செய்வதில் மட்டுமே என்னுடைய கவனம் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது என்றார்.