ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
பிரபல நடிகை ராதிகாவிற்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. சினிமாவிலும் சின்னத்திரையிலும் மிகப்பெரிய ஆளுமையாக வலம் வந்த ராதிகா, தற்போது நடிப்பு ஒருபக்கம் அரசியல் ஒரு பக்கம் என பிசியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்து நடைபெற்றுள்ளது. இதுகுறித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ள ராதிகா, 'நான் எப்போதும் என்னை பற்றியோ என் வேலை பற்றியோ பேச மாட்டேன். கடந்த இரண்டு மாதங்களாக எனக்கு ரொம்ப கொடுமையாக இருந்தது. படங்களில் நடித்து கொண்டிருந்த போது காலில் அடிபட்டது. மாத்திரைகள், பிசியோதெரபி பலனளிக்கவில்லை. மருத்துவர் பரிந்துரையின்படி அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். என் குடும்பம் எனக்கு ஆதரவாக இருந்தது.
அதேபோல் என்னுடைய மிக்கபெரிய தூண், வலிமை, தங்க இதயம் கொண்ட சரத்குமார் இந்த இரண்டு தினங்களாக என்னை குழந்தை போல் பார்த்துக் கொண்டார். இந்த மகளிர் தினத்தில் ஒவ்வொரு பெண்ணும் தன்னைப் பற்றியும் தன்னை மேம்படுத்திக் கொள்ளவும், உங்களை அதிகமாக நேசிக்கவும், உங்களை பாராட்டிக் கொள்ளவும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்' என அந்த பதிவில் குறிப்பிட்டு உலக பெண்கள் தினத்திற்கான வாழ்த்துகளையும் கூறியுள்ளார்.