ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

பிரபல நடிகை ஷகிலா சினிமாவில் பெண்கள் சிகரெட் புகைக்கும் காட்சி குறித்து சர்ச்சையான பதிலை கூறியிருக்கிறார். இதனையடுத்து நெட்டிசன்கள் அவரை திட்டி வருகின்றனர். கவர்ச்சி நடிகையான ஷகிலா, குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் தமிழகத்தில் நல்லதொரு மரியாதையை பெற்று வருகிறார். ஆனாலும் அவ்வப்போது சில சர்ச்சையான கருத்துகளை கூறி நெட்டிசன்களிடம் மாட்டிக்கொள்கிறார். அந்த வகையில் அண்மையில், இயக்குநர் நவீன் குமார் இயக்கிய கடைசி தோட்டா புகைப்படத்தில் வனிதா புகைப்பிடிக்கும் காட்சிகள் குறித்து ஷகிலாவிடம் நிரூபர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ஷகிலா, ''வனிதாவை தெய்வமா பாக்குறீங்களா? இல்ல குடும்ப பெண்ணா பாக்குறீங்களா? இவ்வளவு நாள் வனிதாவை குடும்ப பெண்ணா பாத்தீங்களா? இதுபோன்ற காட்சிகளில் நடிக்க கூடாதா?'' என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய நிரூபர் விஜய் சார் சிகரெட் பிடித்தாலே அதை பலரும் கண்டிக்கின்றனர். ஆணோ, பெண்ணோ சிகரெடி பிடிப்பதை திரைப்படத்தில் காட்டுவது தவறு என்று விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அப்படியிருக்கையில் பெண்கள் சிகரெட் பிடித்தால் திட்டமாட்டார்களா? என மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கு ஷகிலாவோ, ''திட்டினால் திட்டட்டும். அப்படியென்றால் தானே நாங்கள் பாப்புலர் ஆக முடியும்'' என பொருப்பில்லாமல் பதில் கூறியுள்ளார். ஷகிலாவின் இந்த சர்ச்சை மிகுந்த கருத்தானது நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.