யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
‛பாரதி கண்ணம்மா' தொடரின் மூலம் சின்னத்திரை ஹீரோவாக அறிமுகமானவர் அருண். அதேபோல் ‛ராஜா ராணி 2' தொடரில் வில்லியாக எண்ட்ரி கொடுத்து அசத்தியவர் வீஜே அர்ச்சனா. இவர்கள் இருவரும் காதலித்து வரும் தகவல் சில ஆண்டுகளுக்கு முன்பே விஜய் டிவி விருது நிகழ்ச்சியின் மூலம் வெளியானது. எனினும், இருவரும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலையும் அறிவித்ததில்லை. அதேபோல் இன்ஸ்டாகிராமிலும் இருவரும் சேர்ந்து புகைப்படங்கள் எதையும் வெளியிட்டதில்லை.
அண்மையில் நிறைவுற்ற பிக்பாஸ் சீசன் 8ல் அருண் பிரசாத் போட்டியாளராக கலந்து கொண்டபோது தான் அர்ச்சனா, அருண் பிரசாத் தான் தனது வாழ்க்கை என அறிவித்தார். இந்நிலையில், நேற்றைய தினம் காதலர் தினத்தை முன்னிட்டு அருண் பிரசாத் அர்ச்சனாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு தனது 5 வருட காதல் வாழ்க்கை குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அர்ச்சனாவுக்கு தனது காதலர் தின வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.