காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
பிக்பாஸ் சீசன்- 8 நிகழ்ச்சி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் முதல் நாளிலேயே சாச்சனா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அதோடு இந்த முறை ஆண்கள் அணி, பெண்கள் அணி என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் நாளில் நாற்காலி, யார் காலி என்ற தலைப்பில் ஒரு டாஸ்க் நடத்தப்பட்டது. அப்போது அந்த விளையாட்டில் ஓடிய தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகருக்கு காலில் அடிபட்டது. நடக்க முடியாத நிலையில் இருந்த அவரை கை தாங்கலாக போட்டியாளர்கள் அழைத்து சென்று அமர வைத்தார்கள். அதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்னொரு போட்டியாளரான சீரியல் நடிகர் தீபக்கிற்கும் அதே போன்று காலில் வலி ஏற்பட்டுள்ளது. அவரையும் ரவீந்திரனை போலவே 2 சக போட்டியாளர்கள் அழைத்து செல்லும் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. ஆனால் அதைப்பார்த்து உண்மையிலேயே அவர்களுக்கு காலில் அடிபட்டதா? இல்லை ஆரம்பத்திலேயே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறதா? என்று நெட்டிசன்கள் பலரும் சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.