ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
பிக்பாஸ் சீசன்- 8 நிகழ்ச்சி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் முதல் நாளிலேயே சாச்சனா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அதோடு இந்த முறை ஆண்கள் அணி, பெண்கள் அணி என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் நாளில் நாற்காலி, யார் காலி என்ற தலைப்பில் ஒரு டாஸ்க் நடத்தப்பட்டது. அப்போது அந்த விளையாட்டில் ஓடிய தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகருக்கு காலில் அடிபட்டது. நடக்க முடியாத நிலையில் இருந்த அவரை கை தாங்கலாக போட்டியாளர்கள் அழைத்து சென்று அமர வைத்தார்கள். அதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்னொரு போட்டியாளரான சீரியல் நடிகர் தீபக்கிற்கும் அதே போன்று காலில் வலி ஏற்பட்டுள்ளது. அவரையும் ரவீந்திரனை போலவே 2 சக போட்டியாளர்கள் அழைத்து செல்லும் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. ஆனால் அதைப்பார்த்து உண்மையிலேயே அவர்களுக்கு காலில் அடிபட்டதா? இல்லை ஆரம்பத்திலேயே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறதா? என்று நெட்டிசன்கள் பலரும் சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.