மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
சிறகடிக்க ஆசை தொடரின் கதாநாயகியான கோமதி பிரியா, சிம்பிளான தோற்றத்துடனும் எளிமையான நடிப்பாலும் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த ஆண்டுக்கான விஜய் டிவி விருது நிகழ்வில் கோமதி பிரியாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய கோமதி பிரியா, 'இந்த மீனா கேரக்டர் என்னுடைய நிஜ வாழ்விலும் மிகவும் மேட்ச் ஆனது. இந்த சீரியலில் எனக்கு எப்படி அப்பா இல்லையோ அது போல என் நிஜ வாழ்விலும் எனக்கு அப்பா இல்லை. அம்மா தான் தனியாக கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தார். நான் சென்னைக்கு வந்த புதிதில் மிகவும் கஷ்டப்பட்டேன். வாய்ப்பு எளிதாக கிடைத்துவிடவில்லை. ஆனால் இப்போது மக்கள் எனக்கு அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள்' என்று பேசியிருந்தார். அப்போது கோமதி பிரியாவின் அப்பாவின் உருவத்தை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் கொண்டு வந்த விழா குழுவினர் அவர் தனது மகளை வாழ்த்துவது போல் எடிட் செய்திருந்தனர். அதை பார்த்த கோமதி பிரியா மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போனார்.