அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
சிறகடிக்க ஆசை தொடரின் கதாநாயகியான கோமதி பிரியா, சிம்பிளான தோற்றத்துடனும் எளிமையான நடிப்பாலும் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த ஆண்டுக்கான விஜய் டிவி விருது நிகழ்வில் கோமதி பிரியாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய கோமதி பிரியா, 'இந்த மீனா கேரக்டர் என்னுடைய நிஜ வாழ்விலும் மிகவும் மேட்ச் ஆனது. இந்த சீரியலில் எனக்கு எப்படி அப்பா இல்லையோ அது போல என் நிஜ வாழ்விலும் எனக்கு அப்பா இல்லை. அம்மா தான் தனியாக கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தார். நான் சென்னைக்கு வந்த புதிதில் மிகவும் கஷ்டப்பட்டேன். வாய்ப்பு எளிதாக கிடைத்துவிடவில்லை. ஆனால் இப்போது மக்கள் எனக்கு அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள்' என்று பேசியிருந்தார். அப்போது கோமதி பிரியாவின் அப்பாவின் உருவத்தை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் கொண்டு வந்த விழா குழுவினர் அவர் தனது மகளை வாழ்த்துவது போல் எடிட் செய்திருந்தனர். அதை பார்த்த கோமதி பிரியா மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போனார்.