2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

பிரபல சின்னத்திரை நடிகையான தீபா, பிரியமான தோழி, அன்பே சிவம், நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல ஹிட் தொடர்களில் வில்லியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இவர் சிறந்த முருக பக்தை என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், இவர் முருகன் ஆணைக்கிணங்க தொட்டியம் அருகேயுள்ள ஏலூர்பட்டியில் கோவில் ஒன்றை கட்டியுள்ளாராம்.
இதுகுறித்து அவர் சொன்ன போது, 'மாங்காட்டு காமாட்சியம்மன் கோவில் சென்றுபோது அங்கே முருகனின் பெயரில் உள்ள சுப்பிரமணியன் என்கிற சாமியாரை பார்த்தேன். அவர் தொட்டியம் அருகே காசிவிஸ்வநாதர் கோவில் கட்டப்பட்டு வருவதை எனக்கு சொன்னார். அவரை பார்த்த சில நாட்களிலேயே முருகனுக்கு கோவில் எழுப்ப அங்கு போ என்று எனக்கு தோன்றியது. அடுத்த நாளே அங்கு சென்று ஊர்க்காரர்களுடன் அந்த வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன். இப்போது எல்லா வேலையும் முடிந்து கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது. இதில் என்னுடன் மெட்டி ஒலி வனஜா, கம்பம் மீனா, மின்னல் தீபா, அழகப்பன் ஆகியோருக்கும் பங்கு இருக்கிறது' என்று கூறியுள்ளார்.