23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா | தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை |
திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தரும், சின்னத்திரை நடிகையான மகாலெட்சுமியும் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தை பலரும் கேலி, கிண்டல் என விமர்சித்து வந்ததோடு இவரும் மூன்று மாதங்களுக்குள் பிரிந்து விடுவார்கள் என்றும் கூறி வந்தனர். ஆனால், இதையெல்லாம் கடந்து ரவீந்தர் - மஹாலெட்சுமி தம்பதியினர் அண்மையில் தங்களது இரண்டாவது திருமணநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர்.
இதுகுறித்து ரவீந்தர் வெளியிட்டுள்ள பதிவில் 'நம்ம நல்லா இருக்கணும்னு நினைக்கிற கூட்டம் உங்கள் கிட்ட இருக்கும் வரை உங்களுக்கு மகிழ்ச்சி தான். எங்கள இனியும் கிண்டல், உருவகேலி செய்வதில் பலனில்லை. மூன்று மாதம் தாங்குமா இவங்க கல்யாணம்னு கேட்டவங்களுக்கு என்னோட அன்பான பதில் மறக்காம எங்க போட்டோவுக்கு லைக் அண்ட் ஷேர் பண்ணிடுங்க' என்று தரமான பதிலடி கொடுத்துள்ளார்.