மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
சூப்பர் ஹிட் அடித்து வந்த தொடர் எதிர்நீச்சல். எதிர்பாராத வகையில் ஆதிகுணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து மரணமடைய, வேல ராமமூர்த்தி என்ட்ரி கொடுத்தார். ஆனால், அவரது நடிப்பை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சீரியலுக்கு இருந்த வரவேற்பும் குறைந்ததால் தற்போது முடிவுக்கு வந்துவிட்டது.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய வேல ராமமூர்த்தி, 'டிஆர்பியில் உச்சத்தில் இருந்த சீரியல் எதிர்நீச்சல் தான். ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. ஆனால், இந்த சீரியலில் நான் ஏன் நடித்தேன் என்று தான் இப்போது நினைக்கிறேன். மக்கள் என்னை ஏற்றுக்கொள்ளவே இல்லை. மிகப்பெரிய அவமானமாகவே நான் இதை பார்க்கிறேன்' என வருத்தத்துடன் பேசியுள்ளார்.