அதிக சம்பளம் பெறுவதில் அனிருத் தான் நம்பர் 1 | தமிழிலிருந்து பிறந்த கன்னடம்… கமலுக்கு ஆதரவாக ரஜினிகாந்த், விஜய் அறிக்கை வெளியிடுவார்களா? | தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் பற்றிய வதந்தி : மறுத்த தம்பி | தீபிகாவுக்கு ஆதரவாகப் பேசினாரா அஜய் தேவ்கன்? | அயோத்தியில் நான்காவது 'மனை' வாங்கிய அமிதாப்பச்சன் | தெலங்கானா மாநில சினிமா விருது வென்ற எஸ்ஜே சூர்யா, நிவேதா தாமஸ் | கமல் சாரை பற்றி தப்பா பேசாதீங்க! - சர்ச்சை குறித்து ஆவேசமாக பேசிய சிவராஜ்குமார் | கார்த்தியின் 'கைதி- 2' படப்பிடிப்பு: டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறது! | அபிஷன் ஜீவிந்த் மூலம் எனக்கு கிடைத்த புகழ்! - சசிகுமார் நெகிழ்ச்சி | சூர்யா 45வது படம் பண்டிகை நாளில் வெளியாகும்! - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தகவல் |
சின்னத்திரை புதுமுகமான ப்ரீத்தா ரெட்டி தமிழில் இனியா மற்றும் சிறகடிக்க ஆசை ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். அதிலும், சிறகடிக்க ஆசை தொடரில் இவர் நடித்து வரும் ஸ்ருதி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் ரீச்சாகியுள்ளது. இதுகுறித்து அண்மையில் பேட்டியளித்துள்ள ப்ரீத்தா, 'நான் இதற்கு முன் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் சிறகடிக்க ஆசை தொடர் தான் எனக்கு அதிகமான பிரபலத்தை கொடுத்தது. இப்போது என்னை பலரும் 'பல குரல்' என்று தான் கூப்பிடுகிறார்கள். இயக்குநர் முதலில் கதை சொல்லும் போது ஹீரோ கேரக்டர் போலவே என்னுடைய கேரக்டரும் இருக்கும் என்று சொன்னார். உள்ளே வந்த பின்பு தான் எனக்கு என்னுடைய கேரக்டர் பற்றி தெரிந்தது. ஆனால், இப்பொழுதும் என்னுடைய கேரக்டரை புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருநாள் ஒரு மாதிரி, மற்றொரு நாள் வேறொரு மாதிரி இருக்கிறது. இன்னும் இயக்குநர் என்னவெல்லாம் சொல்லப் போகிறாரோ? என்று தெரியவில்ல' என ப்ரீத்தா அந்த பேட்டியில் கலகலப்பாக பேசியுள்ளார்.