ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

நடிகைகள் மற்றும் பிரபலமான பெண்கள் பலரும் சமீபகாலங்களில் தங்களுக்கு நடக்கும் பாலியல் ரீதியான கொடுமைகளை வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றனர். அந்த வகையில் சின்னத்திரை நடிகை அஞ்சலி பாஸ்கரும் தனக்கு நடந்த பாலியல் சீண்டல் குறித்து ஓப்பனாக பேசியிருக்கிறார். அவர் அண்மையில் அளித்த பேட்டியில், 'நான் கஷ்டபட்ட குடும்பத்தில் இருந்து வந்ததால் பேருந்தில் பயணம் செய்வேன். பேருந்தில் சிலர் பெண்களை தவறாக பார்ப்பார்கள் சிலர் பாலியல் சீண்டலில் ஈடுபடுவார்கள். ஒருசமயம் ஒரு நடுத்தவர வயது நபர் என்னை தவறான வகையில் உரசினார். நான் உடனே அந்த நபருக்கு ஓங்கி ஒரு குத்துவிட்டு திட்டினேன். அதன்பின் அந்த நபர் இறங்கி சென்றுவிட்டார். ஆனால், அப்போது பேருந்தில் இருந்த ஒரு பெண் கூட எனக்காக ஆதரவு குரல் கொடுக்கவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருந்தது' என்று கூறியிருக்கிறார்.




