ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் | கடனை திருப்பி கேட்டதால் என் மீது புகார் : நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா | திரிஷா போன்ற அமெரிக்கா பெண் ஒருவர் என் மீது காதல் வயப்பட்டார் : நடிகர் பாலா புது தகவல் | எம்புரான் படத்திற்கு எந்த அரசியல் அழுத்தமும் தரப்படவில்லை : சுரேஷ் கோபி | நடிகையை கடத்தி துன்புறுத்த திலீப் தான் பணம் கொடுத்தார் : முதல் குற்றவாளி பல்சர் சுனில் பரபரப்பு பேச்சு | குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! |
நாதஸ்வரம் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஸ்ருதி சண்முகப்பிரியா தொடர்ந்து பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் அரவிந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமான ஒரு வருடத்திலேயே அரவிந்த் காலாமனார். இந்நிலையில், இவர்களது இரண்டாவது திருமணநாள் அண்மையில் வந்தது. அன்றைய தினத்தில் ஸ்ருதி தனது கணவர் புகைப்படத்தை அருகில் வைத்து கேக் வெட்டி கொண்டாடி 'உன்னை சந்திக்க காத்திருக்கிறேன்' என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
ஸ்ருதியின் இந்த நிலைமையை பார்க்கும் பலரும் ஒருபுறம் அவர் தைரியமாக இருப்பதை நினைத்து சந்தோஷப்பட்டாலும் மறுபுறம் அவர் அரவிந்தை நினைத்து வருந்துவது குறித்து கவலைப்பட்டு வருகின்றனர். சிலர், ‛அரவிந்த் இறந்துவிட்டார். ப்ளீஸ் அதிலிருந்து வெளிய வந்து வேற லைப் அமைச்சிக்கோங்க' எனவும் அட்வைஸ் செய்து வருகின்றனர். கணவரை இழந்த ஸ்ருதி தற்போது வாழ்க்கையின் அடுத்தக்கட்ட நகர்வாக தற்போது லெட்சுமி சீரியலில் கம்பேக் கொடுத்துள்ளார். அதுபோலவே அவர் மீண்டும் மறுமணம் செய்ய வேண்டும் என்பது ரசிகர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.