அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
சுந்தரி தொடரின் கதாநாயகியான கேப்ரில்லா செல்லஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறிவிட்டார். இவரை பலரும் ரோல்மாடலாக கொண்டுள்ளனர். பல கல்லூரி மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளுக்கும் சிறப்பு விருந்தினராக அழைக்கின்றனர். இந்நிலையில், இவர் அண்மையில் அவரது சோஷியல் மீடியாவில் வெளியிட்ட பதிவு ஒன்றில் 'அனைத்து வன்மங்களையும் அனைத்து பேச்சுகளையும் தாங்கும் பக்குவம் நமது வாழ்க்கையின் அருமை தெரியும்போதே புரியும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்க்கும் பலரும் கேப்ரில்லா இவ்வளவு அழுத்தமான கோபமான மெசேஜை யாருக்காக பதிவிட்டிருக்கிறார்? என கேள்வி கேட்டு வருகின்றனர். நடிக்க ஆரம்பித்த ஆரம்பகாலக்கட்டத்தில் கருப்பு நிறம், சுமாரான மூஞ்சி என பல காரணங்களுக்காக கேப்ரில்லா விமர்சிக்கப்பட்டார். ஆனால், அந்த தடையெல்லாம் உடைத்து தான் இன்று மக்களின் பிரபலமான நடிகை பட்டியலில் கேப்ரில்லா இடம்பிடித்துள்ளார். இதை குறிப்பிட்டு தான் கேப்ரில்லா இந்த பதிவை போட்டிருப்பார் என ரசிகர்கள் தங்கள் கருத்தை கூறி வருகின்றனர்.