மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
மேடைபேச்சு, பட்டிமன்றம் மூலம் புகழ்பெற்றவர் சந்தியா. 'சவுண்டு சந்தியா' என்ற அவருக்கு பட்டப்பெயர்கூட உண்டு. தனது பேச்சுதிறனால் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமானார். அதன்பிறகு 'கண்மணி' சீரியலில் அறிமுகமான சந்தியா, சுந்தரி நீயும் சுந்தரன் நானும், நம்ம வீட்டுப் பொண்ணு போன்ற தொடர்களில் நடித்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'சக்திவேல்' தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் அவர் 'மெட்டி ஒலி' சாந்தியின் மருமகளாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சாந்தியின் நிஜ மருமகளாகவும் சந்தியா ஆகிறார். சாந்தியின் மகன் முரளிக்கும், சந்தியாவுக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. இது பெற்றவர்கள் முடிவு செய்த திருமணமாம். திருமண நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்துள்ளது. அந்த படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மாமியாருக்கும், மருமகளுக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.